This Article is From Aug 14, 2019

முதல்ல கவின், அடுத்து முகேன், இப்போ தர்ஷனா?

Bigg Boss Tamil Season 3 Update: பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறீர்கள் என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்தார் மதுமிதா.

முதல்ல கவின், அடுத்து முகேன், இப்போ தர்ஷனா?

Bigg Boss 3 Tamil Contestants: இன்று தர்சன் மதுமிதா இடையே சண்டை வெடித்துள்ளது

Bigg Boss 3 Tamil: நேற்று அபிராமி முகேனிடம் தன் பிரச்னையை பற்றி பேச, அது பெரிய விவாதத்திற்கு போய், கடைசில அது அடிதடி சண்டைல முடிஞ்சிருச்சு. இந்த பிரச்னை கடந்த வாரம் முழுவதும், பெரிய வெடிகுண்டு போல பிக் பாஸ் வீட்டிற்குள் வெடித்தது. சென்ற வாரத்தின் முதல் நாளில், முகென் பேசிக்கொண்டிருக்க அபிராமி பதிலளிக்காமல் அழுது கொண்டே இருந்ததால், ஆத்திரமடைந்த முகேன் அருகில் இருந்த கட்டிலை குத்தி உடைத்துவிட்டார். இந்த பிரச்னை கமலின் முன் விவாதத்திற்கு வருகையில், தன் அன்பு ஒருவரின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடாது என்று அபிராமியிடம் கூறியிருந்தார். அப்போது, தான் முகெனை காதலிப்பதாகவும், முகென் என்னுடன் நட்பாகத்தான் பழகுகிறார் என்பதையும் ஒப்புக்கொண்டார். நேற்று கமல் அப்படி சொல்லும்போது, ஏன் அபிராமிக்கு ஆதரவாக முகென் பேசவில்லை என்பதிலேதான் பிரச்னை துவங்கியது. இந்த பிரச்னையில், அனைவரும் முகெனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே பிரச்னை கவினுக்கு நடந்தது. கவின் - சாக்க்ஷி, சாக்க்ஷி கவினிடம் பொசெசிவ் ஆக, அது கடைசியில் வீட்டில் பெரிய பிரச்னையாக வெடித்தது. இருவரும் தனியே அந்த பிரச்னையை பேசித் தீர்த்திருந்தாலும், அனைவரின்முன் அந்த பிரச்னையை மீண்டும் எடுத்து வந்தார் சாக்க்ஷி. அப்போதும், அனைவரும் கவினிற்கு ஏதிராக நின்றனர்.

vp4etdeg

இந்த இரண்டிலும் ஆட்கள்தான் வேறு, மற்றபடி பிரச்னை கிட்டத்தட்ட ஒன்றுதான். அப்போது இருந்து கவின், முகென் மற்றும் தர்சன், இருவரிடமும் சொல்லும் ஒரே அறிவுரை, "ஒரு பெரிய எடுத்துக்காட்ட உங்க முன்னாடி நிக்கிறேன் டா, சிக்கிக்காதீங்க டா". இது கவின் ஒருவருடைய அறிவுரை மட்டுமல்ல. இது வெறும் அறிவுரையாகவே இருந்தது, செயல்முறையாகவில்லை. அதன் விளைவை நேற்று பார்த்திருப்போம்.

இப்படி இருக்க, அவங்க சொல்றது கரக்டா நடந்துருச்சே. முதல்ல கவின், அடுத்து முகேன், தர்சன் எப்போ சிக்கப்போறாறோ என யோசித்துக்கொண்டிருக்க இன்று பிரச்னை தர்சனிடம் திரும்பியுள்ளது. ஆனால், செரினிடமிருந்து அல்ல, மதுமிதாவிடமிருந்து. இன்று வெளியான ப்ரோமோவை வைத்து பார்க்கையில், மதுமிதா கவினிடம் எதோ விவாத்தித்துக்கொண்டிருப்பார் போல, அப்போது தர்சன் கவினிடம் எதோ சொல்லி அழைத்துள்ளார். அதுதான் தர்சனுக்கு எதிரான பிரச்னையாக வெடித்துள்ளது.

s7p8pk5

கிட்சன் அருகில் வைத்து, கவினிடம் தர்சன் பற்றி "நீயும் நானும் பர்சனலா பேசும்போது, ஏன் இப்படி சொல்லனும். வந்த உடனே மேடம் (வனிதா) என்ன சொன்னாங்க. ஆண்கள் பெண்கள பயன்படுத்துக்கிறீங்க. உண்மையா அது இன்னைக்கு நடந்துருச்சு. மேடம் வந்த உடனே ஒரு விஷயம் சொன்னாங்க. பத்து நிமிஷம் கதவ திறந்து வைப்போன்னு. அப்படி பத்து நிமிஷம் திறந்து வச்ச போற முதல் ஆள் நானாதான் இருப்பேன். இங்க அவ்வளவு அடிமை படுத்துறீங்க நீங்க!"

இப்போ தர்சனோட மைண்ட்-வாய்ஸ் இதுவாகத்தான் இருக்கும்,"வாடனுதானடா கூப்பிட்டேன். அதுக்கு போய் பெண்களை அடிமைப்படுத்துறேன்னு சொல்லிட்டீங்களேடா'

அடிமை படுத்துவது என்பது பெரிய வார்த்தை என்று கவின் சொல்ல, 'சரி அடிமைப்படுத்த, பயன்படுத்திக்கிறீங்க' என்று மதுமிதா சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

me1pafgo

'இந்த பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்களா, அல்லது இந்த வாரம் பெண்கள் ஆண்களை டார்கெட் செய்கிறார்களா?' உங்கள் கருத்துகளை கமென்ட்களில் பதிவு செய்யுங்கள்!

சரி, இந்த பிரச்னை நடந்த அப்போ வனிதா எங்க இருந்தாங்க? அங்கையேதான், எனக்கும் அந்த பிரச்னைக்கும் சமந்தமே இல்லை அப்படிங்கிற மாதிரி கிட்சன்ல கேஷ்வலா கேரட்டா துருவீட்டு இருந்தாங்க.

.