This Article is From Aug 20, 2019

Bigg Boss Nomination: புதிதாக இணைந்த சாண்டி, தர்ஷன், தலைகீழாக மாறிய நாமினேஷன், காரணம் என்ன?

Bigg Boss 3 Nomination: சென்ற வாரம் 50 நாட்களில் பிக் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக தேர்வான தர்ஷன் (Tharshan), சாண்டி (Sandy) நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர்.

Bigg Boss Nomination: புதிதாக இணைந்த சாண்டி, தர்ஷன், தலைகீழாக மாறிய நாமினேஷன், காரணம் என்ன?

Tharshan and Sandy, Bigg Boss 3 Tamil Contestants: நாமினேஷனில் இணைந்த தர்சன், சாண்டி

Bigg Boss Tamil Season 3, Day 57: நேற்று இந்த வாரத்திற்கான பிக் பாஸ் நாமினேஷன் (Bigg Boss Nomination) நடைபெற்றது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் முற்றிலும் வித்தியாசமாகவே இருந்தது. சென்ற வாரம் இருந்த ஒருவர் கூட இந்த வார நாமினேஷனில் இடம்பெறவில்லை. கிட்டத்தட்ட அப்படியே தலைகீழாக இருந்தது இந்த வார நாமினேஷன். எதிர்பாராத முகங்கள் எல்லாம் இந்த வார நாமினேஷனில் இணைந்தன. முன்னதாக சென்ற வார நாமினேஷனில் கவின், லாஸ்லியா, முகென், அபிராமி மற்றும் மதுமிதா என ஐந்து பேர் நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். அதில் இருவர் வெளியேறினர். ஒருவர் பிக் பாஸ் வீட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, மற்றொருவர் வழக்கமான பிக் பாஸ் எளிமினேஷன் (Bigg Boss Elimination) வழியாக. ஆனால், இந்த வார நாமினேஷனில் சென்ற வாரம் இடம்பெற்ற யாரும் இருக்கவில்லை. சேரன் (Cheran), கஸ்தூரி (Kasthuri) ஆகியோருடன், சென்ற வாரம் 50 நாட்களில் பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக தேர்வான தர்ஷன் (Tharshan), சாண்டி (Sandy) ஆகியோர் இணைந்துள்ளனர்.

இந்த வாரம் நாமினேஷன், பிக் பாஸ் வீடு இரண்டு அணிகளாக மாறிவிட்டதா எனத் எண்ண வைக்கிறது. முன்னதாகவே, சென்ற வாரம் தொடர்ந்து சிலரை குறிவைத்து பேசி பிரச்னைகளை உண்டாக்கி அவர்களை ஒரு அணிபோல பிரித்துவிட்டனர். அது அனைத்தும் நமக்குத் தெரிந்ததே. இப்போது அந்த இன்னொரு அணி, சேரன், வனிதா, கஸ்தூரி ஆகியோர் ஒரு அணியாக மாறியுள்ளனர். நாமினேஷன் துவங்குவதற்கு முன்பே, இவர்கள் பல முறை கூடி, அந்த ஐவரை குறிவைப்பது போல பேசியுள்ளனர். இது இரண்டு நாட்களாக பிக் பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெறும்  ஒரு நிகழ்வாக இருக்கிறது. அந்த ஐவர் அணியில் யார் சிறந்த போட்டியாளர்கள் என்ற ஆலோசனை இவர்கள் இடையில் அடிக்கடி நேர்ந்துள்ளது. இதன், எதிரொலிப்பு நாமினேஷனிலும் வெளிப்பட்டது.

இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியது. சென்ற வாரம் நாமினேஷன் நடந்த பிறகு வனிதா வீட்டிற்குள் வந்ததால், அவரை நாமினேட் செய்யக்கூடாது என்றார் பிக் பாஸ். வனிதாவை காப்பாற்ற நினைக்கிறீர்களா பிக் பாஸ்? அவர் வீட்டிற்குள் வந்த பிறகுதாம், வீடு கொதிக்கும் தண்ணீர் போன்றே உள்ளது. இந்த சுவாரஸ்யத்தை பிக் பாஸ் தக்கவைத்துக்கொள்ள, வனிதாவை பிக் பாஸ் காப்பாற்றுகிறாரா?

gurnk8vo

நாமினேஷன் துவங்கியது... எதிர்பார்த்தது போலவே முதலில் சென்ற வனிதா, சாண்டி, தர்ஷனை நாமினேட் செய்தார். கஸ்தூரி மற்றும் சேரனின் வாக்குகளும் அவர்களுக்கே. அடுத்து இந்த ஐவரின் கோபமும் இருவர் மீதுதான் இருந்தது, கஸ்தூரி  மற்றும் சேரன். சேரன், சென்ற வாரம் ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள் என்று ஒரு பெரிய விவாதம் நடந்தபோது அதுபற்றி ஒரு கருத்தும் கூறாமல், அங்கு அமைதியாக வேறு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். சாண்டியின் மொழிகளில் வெண்டைக்காய் நறுக்கிக் கொண்டிருந்தார். கஸ்தூரி, தெரியாத பல பிரச்னைகளில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசுகிறார். இந்த வாரத்தின் தலைவரான செரின் (Sherin), இதே காரணத்தை கூறித்தான் கஸ்தூரியை நாமினேட் செய்தார். இன்னொரு நாமினேஷனாக முகெனை தேர்வு செய்தார் செரின். காரணமாக சென்ற வார பிரச்னைகளை நினைவுகூர்ந்தார்.

சொல்லப்போனால், இந்த வார நாமினேஷன் அப்படியாகத்தான் இருந்திருக்கும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். சென்ற வாரம் பிரச்னைகளை வைத்துப் பார்க்கையில் முகெனும் கவினும்தான் நாமினேட் ஆவர்கள் என்று பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அது தற்போது தலைகீழாக மாறியுள்ளது.

நாமினேஷன் முடிந்ததும், சேரனை நாமினேட் செய்ததற்காக லாஸ்லியா வருத்தத்தில் இருந்தார். அப்போது கவின், சாண்டி, தர்சன் ஆகியோர், அவர் மனதைத் தேற்றினார்கள். சிறைக்குச் செல்ல லாஸ்லியாவை நாமினேட் செய்த போது, தான் நியாயமாக இருந்ததால் லாஸ்லியாவின் பெயரை சொன்னதாகவும், அந்த நியாயமே என் மகளுக்கு தரும் பரிசு என்றும் கூறினார். அதை நினைவுகூர்ந்த தர்சன், 'நீயும் நியாயமாகத்தான் நாமினேட் செய்திருக்கிறாய். வேறு யாரையாவது நாமினேட் செய்திருந்தால்தான் தவறு' என்று ஆறுதல் கூறினார். லாஸ்லியாவின் இந்த செயலுக்கு இணையத்திலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 

.