Read in English
This Article is From Aug 12, 2019

'தர்ஷனுக்குதான் சார் முதலிடம்'- 50வது நாளில் பிக் பாஸின் வெற்றியாளர்!

Bigg Boss 3: 50 நாட்களில், வெற்றி போட்டியாளராக தர்ஷன் தேர்வாகியுள்ளார்.

Advertisement
Entertainment Written by

Bigg Boss tharshan: தர்ஷன் முதலிடம், இரண்டு, மூன்றாவது இடங்களில் சாண்டி, மதுமிதா!

Bigg Boss Tamil 3: பிக் பாஸ் (Bigg Boss) வீடு தன் பாதி கடலை தாண்டிவிட்டது, அதாவது 100 நாட்களில் 50 நாட்களை கடந்துவிட்டது. இந்த 50 நாட்களில், 7 வாரங்களில், 7 வெளியேற்றங்கள், 1 வைல்ட்-கார்டு என்ட்ரி (Wildcard entry), தினம் ஒரு பிரச்னை, காதல், நட்பு, உறவு என அனைத்தும் இடம்பெற்றிருந்து. இந்த சந்தோசத்துடனேயே நேற்ற பகுதியை துவங்கி வைத்தார் கமல்.

முதலில், இந்த 50 நாட்களில் டாப் 3 போட்டியாளர்கள் யார் என்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. கவினிடம் துவங்கிய வாக்குப்பதிவு மதுமிதாவிடம் முடிந்தது. இதன் முடிவில், முதலிடம் தர்ஷனுக்கு (Tharshan) வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை சாண்டிக்கு அளித்தனர் வீட்டு மக்கள். மூன்றாவது இடத்தில் மதுமிதா. 

இந்த டாப் 3 போட்டியாளர்களுக்கும் வெற்றிப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. முன்பு வழங்கப்பட்டது போன்ற வெளியே செல்லும்போது உடைத்துவிட்டு செல்லும் பதக்கங்கள் அல்ல, வீட்டிற்குள் எடுத்து செல்லக்கூடிய வெற்றிப் பதக்கங்கள்.

அதன்பின், இந்த வார எளிமினேஷன். முதலில் லாஸ்லியா காப்பாற்றப்பட்டார் என்பதை அறிவித்தார் வார இறுதி நாட்களின் பாஸ் கமல். வழக்கமாக, வசனம் பேசிவிட்டு விளம்பர இடைவேளைக்கு என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

Advertisement

முன்னதாகவே, நாமினேஷனில் இருக்கும் மூவருக்கும் பாட்டு தயார் செய்யும்படி கவின் - சாண்டிக்கு சீக்ரெட் டாஸ்க் கொடுத்திருந்தார் பிக் பாஸ். விளம்பர இடைவேளைக்கு பிறகு, கவின் - சாண்டியிடம் அந்த பாடல்களை பாடக் கேட்டார் கமல். முதலில் சாக்க்ஷி, அடுத்து அபிராமி, லாஸ்லியா என மூவருக்கும் தாங்கள் தயார் செய்திருந்த பாட்டை பாடிக் காடினார்கள். 

அதன்பின் எந்த ஒரு இளுபறியுமின்றி, சாக்க்ஷியை வெளியே வருமாறு எளிமினேஷனை அறிவித்து விட்டார் கமல்.

Advertisement

அனைத்தும் முடிந்தது, தனக்கு கொடுக்கப்பட்ட பதக்கத்தை உடைத்துவிட்டு சாக்க்ஷி வெளியே சென்றுவிட்டார். வெளியே சென்ற பின் சாக்க்ஷியை கஷ்டப்படுத்தியதற்காக சாக்க்ஷி மற்றும் அவருடைய தந்தை, இருவரிடமும் கவின் மன்னிப்பு கேட்க, 'நீங்க என்ன தப்பு பண்ணீங்க, கேம் தான விளையாடுனீங்க' என்று அவர் தந்தை சொன்ன தருணம் நெகிழ்ச்சியானது!

அதன்பின், அன்றைய நாள் எந்த ஒரு சிறப்பான சம்பவங்களுமின்றி சாதாரனமாகவே கடந்தது. ஆனால், இன்றைய நாள் அப்படி இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நாள், புதிய முகங்கள், புதிய டாஸ்க், ஆகியவற்றுடன் ஒரு புதிய ஆள் உள்ளே நுழைந்துள்ளார்.

Advertisement

புதிய ஆள் என்றாலும், இந்த பிக் பாஸிற்கு ரொம்ப பழக்கமானவர்தான் அவர். இந்த வீட்டிலிருந்து இரண்டாவதாக வெளியேறிய வனிதாதான், பிக் பாஸ் வீட்டின் புதிய சிறப்பு விருந்தினர்.

சாக்க்ஷியும் வெளியேறிவிட்டார், அவ்வப்போது கலகலவென வீடு இருந்தாலும், பிக் பாஸ் வீடு சுவாரஸ்யத்தை இழந்து வருகிறது. அந்த சுவரஸ்யத்தை கூட்ட வெறு வழிகளில் காய்களை நகர்த்துகிறாரா பிக் பாஸ்?

Advertisement

இந்த வார கேப்டன் டாஸ்க்கில், சேரன், லாஸ்லியாவுடன் போட்டியிட்ட சாண்டி, கேப்டன் பதவியை வென்றார். வெல்லும்போதே, இந்த வீட்டை சிரிப்பு நிறைந்த வீடாக வைத்துக்கொள்வேன் என்று வாக்குறுதி அளித்தார். பிக் பாஸின் சூழ்ச்சியை முறியடித்து வாக்குறுதியை காப்பாறா சாண்டி?

Advertisement