This Article is From Aug 09, 2019

வைல்ட் கார்டு என்ட்ரி - முதல் நாளிலேயே ஆதிக்கம் செலுத்தும் 'கஸ்தூரி'!

கஸ்தூரி பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும், அவர் இந்த 45 நாட்களில் ஒவ்வொரு போட்டியாளரையும் நன்றாகவே ஆராய்ந்துள்ளார் என்பது தெரிகிறது.

வைல்ட் கார்டு என்ட்ரி - முதல் நாளிலேயே ஆதிக்கம் செலுத்தும் 'கஸ்தூரி'!

Bigg Boss Tamil 3, Kasthuri: வைல்ட் கார்டு என்ட்ரியில் கஸ்தூரி

லக்சரி பட்ஜெட் டாஸ்க் முடிந்துவிட்டது. அவரவர் வேலைகளுடன் துவங்கியது அடுத்த நாள். பிக் பாஸ் வீட்டின் முழு நேர ஹேர் ஸ்டைலிஸ்டாக செரின் மாறிவிட்டார். தற்போது, தர்ஷனுக்கு ஹேர் ஸ்டைலிங் செய்து கொண்டிருந்தார். வழக்கம்போல, கவின்-சாண்டி வீட்டிற்குள் சுற்றிக்கொண்டிருக்க, சாக்க்ஷி-அபிராமி வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சமையல் செய்யும் மதுமிதா, காய்கறி வெட்டும் தர்ஷன், அமைதியாக சேரன் என அன்றைய நாள் அப்படியாக சென்றது.

மதியம் வழக்கம்போல கவின், சாண்டி, முகேன், தர்ஷன் என அனைவரும் பாட்டு பாடிக்கொண்டிருந்தனர். பின் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளர்கள் யார், மோசமான போட்டியாளர்கள் யார் என்பதையெல்லாம் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

fi7a85sg

இப்படியாக அந்த நாள் சென்றுகொண்டிருக்க மாலையில்தான் அந்த அறிவிப்பு வந்தது. ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. ஒரு முனையில் பேப்பர் பந்துகளும், மறு முனையில் பேஸ்கெட்டும் வைக்கப்பட்டிருக்கும். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு அட்டை கொடுக்கப்பட்டிருக்கும். அந்த அட்டையை பயன்படுத்தி அந்த முனையில் உள்ள பேப்பர் பந்துகளை ஒருவர் ஒருவராக கைமாற்றி கூடையில் போட வேண்டும். மூன்று அல்லது அதற்கு அதிகமான பந்துகளை கூடைக்குள் போட்டுவிட்டால் அவர்களுக்கு ஒரு கிஃப்ட் வழங்கப்படும்.

அந்த டாஸ்க் முடிந்ததும் அனைவரும் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கவினும் சாண்டியும், அந்தப்  பரிசு, குச்சி மிட்டாயாக இருக்குமா இல்லை குருவி ரொட்டியாக இருக்குமா என்பதுபோல் விவாதித்துக் கொண்டிருந்தனர். ஸ்டோர் ரூம் அலாரம் அடிக்க எல்லாரும் அங்கு விரைந்தனர். லாஸ்லியா மட்டும் ஹாலில் இருந்த கிஃப்டை 'இந்த இருக்குடா கிப்ட்டு' என சரியாக கண்டுபிடித்தார். ஆனால் சாண்டி-கவின் நினைத்ததுபோல கிப்ட் பெட்டிக்குள் இருந்தது குச்சி மிட்டாயோ குருவி ரொட்டியோ அல்ல, ஒரு புதிய வைல்ட் கார்டு போட்டியாளர் கஸ்தூரி.

usq2v028

வெளியே வந்ததும் ஒவ்வொருவராக பேசி முடித்துவிட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு அனைவரையும் ஹால் ஏரியாவிற்கு அழைத்த பிக் பாஸ், சிறந்த போட்டியாளர்கள் யார் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டினார். வீட்டில் உள்ளவர்களின் தேர்வு சாண்டி, சேரன், லாஸ்லியா.

அடுத்துதான் ஆட்டம் ஆரம்பித்தது. அங்கு ஸ்பெஷலாக போட்டிருந்த நாற்காலியில் கஸ்தூரியை அமரவைத்த பிக் பாஸ், இந்த வாரம் ஜெயில் தண்டனை இல்லை என்ற ஒரு நற்செய்தியை அறிவித்தார். அதற்குப்பிறகுதான், இந்த ஐந்து ஸ்பெஷல் பவர்களையும் கஸ்தூரிக்கு வழங்கினார் பிக் பாஸ்.

6gplka6o

1) வீட்டில் யாராவது 10 தோப்புக்கரணம் போட வேண்டும்.

இந்த டாஸ்க்கை செரினிற்கு அளித்தார்.

2) வீட்டில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் தலைகீழாக நிற்க வேண்டும்.

சாக்க்ஷிதான் கடந்த சில வாரங்களாக அனைத்திலும் தலைகீழாக நிற்கிறார். இந்த டாஸ்க் அவருக்குதான் சரியாக இருக்கும் என சாக்க்ஷிக்கு தலைகீழாக நிற்கும் டாஸ்க்கை வழங்கினார்.

3) வீட்டில் யாராவது ஒருவர் யாருக்காவது குடை பிடிக்க வேண்டும்.

தர்ஷனின் உயரத்திற்கு மதுமிதா குடை பிடித்தால் சரியாக இருக்கும் என இந்த டாஸ்க்கை வழங்கினார். தர்ஷனும் கிடைத்ததுடா வாய்ப்பு என டைனிங் டேபிள், நீச்சல் குளம் என எல்லாவற்றிலும் ஏறி இறங்கினார்.

p>0b49ps2

4) ஒரு பிக் பாஸ் வீட்டுப் போட்டியாளர், யாராவது பாத்ரூமிற்குள் சென்றால் வெளியில் அமர்ந்து அவர்கள் வெளியே வரும் வரை பாட்டு பாட வேண்டும்.

இந்த டாஸ்க்கை அபிராமிக்கு வழங்கினார் கஸ்தூரி. அவரும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு டாஸ்க்கில் கலந்துகொண்டார். பாடல்களையும் சிறப்பாகவே பாடினார்.

5) யாராவது ஒருவர் தன் மூக்கால் மன்னித்து விடு என எழுத வேண்டும்.

கவின் நீங்கள்தான் பலரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவருக்கு அந்த டாஸ்க்கை அளித்தார் கஸ்தூரி.

பிக் பாஸ் கைகொடுக்க இப்படியாக, இந்த நாள் முழுவதும் கஸ்தூரியின் ஆதிக்கமாகவே இருந்தது. இந்த ஆதிக்கம் வரும் நாட்களில் தொடருமா?

கஸ்தூரி பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும், அவர் இந்த 45 நாட்களில் ஒவ்வொரு போட்டியாளரையும் நன்றாகவே ஆராய்ந்துள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த ஆய்வுடன் தெளிவான விளையாட்டை விளையாடப் போகிறாரா கஸ்தூரி. நியூட்ரல் ரேஷ்மா, தடாலடி வனிதா, மீரா, யாருடைய இடத்தை நிறப்பப் போகிறார் இந்த கஸ்தூரி?

.