This Article is From Jul 30, 2019

பிக் பாஸ் 3: ‘அப்படி ஏன் சொன்னேன்னா…’- சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து பல்டியடித்த சரவணன்!

சரவணன், தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவே, ட்விட்டரில் சின்மயி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். 

பிக் பாஸ் 3: ‘அப்படி ஏன் சொன்னேன்னா…’- சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து பல்டியடித்த சரவணன்!

கமலுடன் உரையாடும்போதுதான் சரவணன், அப்படிப்பட்ட கருத்தைத் தெரிவித்தார். இந்த சம்பவத்தினால் கமலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

ஹைலைட்ஸ்

  • தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சரவணன்
  • சரவணன் கருத்துக்கு பாடகி சின்மயி எதிர்ப்பு தெரிவித்தார்
  • சின்மயி-இன் கருத்தைத் தொடர்ந்து கமலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்
New Delhi:

பிக் பாஸ் தமிழின் 3வது சீசனில் ஒரு போட்டியாளராக தமிழ் திரைப்பட நடிகர் சரவணன் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அவர் நிகழ்ச்சியின்போது, பேருந்தில் செல்லும்போது பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது பற்றி வெளிப்படையாக தெரிவித்தார். அவர் அப்படி சொன்னது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

குறிப்பாக பாடகி சின்மயி, சரவணன் பேசும் வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்ய, அவரின் கருத்து விவாதப் பொருளானது. இந்நிலையில் தான் கூறிய கருத்து குறித்து சரவணன், “நான் செய்தது போன்ற தவறை வேறு யாரும் செய்யக் கூடாது. அப்படி செய்தால், அதற்கான தண்டனை கண்டிப்பாக கிடைக்கும். கமல் சார் அப்படியொரு விஷயம் பற்றி பேசியபோது நான் கையை உயர்த்தியது, யாரும் அதைப் போன்ற காரியத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்குத்தான்” என்று தெரிவித்துள்ளார். 

கமலுடன் உரையாடும்போதுதான் சரவணன், அப்படிப்பட்ட கருத்தைத் தெரிவித்தார். இந்த சம்பவத்தினால் கமலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 
 

முன்னதாக சின்மயி, “ஒரு நபர், பொதுப் போக்குவரத்து பயன்படுத்தியதே பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதற்குத்தான் என்று தமிழ் சேனல் ஒன்றில் தெரிவிக்கிறார். இதற்கு ஆடியன்ஸ் ஆர்ப்பரிக்கின்றனர். இது ஒரு நகைச்சுவையாம்” என்று கடுப்பாகி ட்வீட்டியிருந்தார். தமிழகத்தில் ‘மீடூ' இயக்கம் வீரியமாக கிளர்ந்தெழ சின்மயி முக்கிய காரணமாக இருந்தார். 

பிரபல கவிஞர் வைரமுத்து, தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார் என்று சின்மயி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். தற்போது சரவணன், தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவே, ட்விட்டரில் சின்மயி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். 

.