This Article is From Jun 27, 2019

மின்னல் தாக்கி 30-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு! பீகாரில் அதிர்ச்சி!!

பீகாரின் பாகல்பூர்,பெகுசராய், சகார்சா, புரியா, அராரியா, கத்திகார், ஜமுய், ககாரியா உள்ளிட்ட மாவட்டங்களில் உயிரிழப்பு நேர்ந்துள்ளது.

மின்னல் தாக்கி 30-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு! பீகாரில் அதிர்ச்சி!!

மின்னல் தாக்கியதில் சுமார் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Patna:

பீகாரில் மின்னல் தாக்கியதில் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 24 மணி நேரத்தில் இந்த உயிரிழப்புகள் நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பீகாரின் பாகல்பூர், பெகுசராய், சகார்சா, புர்னியா, அராரியா, கதிகார், ஜமூ, ககாரியா, மதேய்புரா, மதுபானி, தர்பங்கா, சிதாமர்கி, மிதிகரி, கயா ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்க பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. 

பீகாரில் பருவமழை காரணமாக ஏற்பட்ட மின்னலில் இத்தகைய உயிரிழப்புகள் நேர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

.