Read in English
This Article is From Jul 26, 2019

டிக் டாக் வீடியோ எடுக்க முயன்று ஆற்றில் டைவ் அடித்த சிறுவன் உயிரிழப்பு!!

பீகாரில் ஏற்பட்டிருக்கும் கனமழை வெள்ளத்திற்கு தற்போது வரை 120-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement
இந்தியா Edited by

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Darbhanga :

டிக் டாக் வீடியோ எடுக்க முயன்று ஆற்றில் டைவ் அடித்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் நடந்துள்ளது. 

இங்குள்ள அதால்பூர் கிராமத்தில் காசிம், சிதார் என்ற சிறுவர்கள் டிக் டாக் வீடியோ எடுக்க முயன்றுள்ளனர். இதற்காக ஆற்றில் டைவ் அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் அப்சல் என்ற சிறுவனும் சேர்ந்து கொண்டான்.

ஒரு கட்டத்தில் காசிம் டைவ் அடிக்க அதனை சிதார் மொபைலில் படம் பிடித்துக் கொண்டிருந்தான். அப்போது ஆற்றில் குதித்த சித்திக் மூழ்கத் தொடங்கினான். அவரைக் காப்பாற்றுவதற்காக அப்சலும் ஆற்றுக்குள் குதித்தார்.

இதன் பின்னர்தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. ஆற்றில் தத்தளித்த சிறுவன் சித்திக் தப்பி கரைக்கு வர, அவரைக் காப்பாற்ற முயன்ற அப்சல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

பீகாரில் ஏற்பட்டிருக்கும் கனமழை வெள்ளத்திற்கு தற்போது வரை 120-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement