Read in English
This Article is From Feb 01, 2019

''2019 மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதி''- யோகி ஆதித்யநாத்

இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன என்று உத்தர பிரதேச மாநில பாஜக பொறுப்பாளர் கோவர்தன் ஜடாபியா கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா

லக்னோவில் அமித் ஷா பங்கேற்ற கூட்டத்தில் பேசும் யோகி ஆதித்யநாத்.

Lucknow:

2019 மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

லக்னோவில் நடைபெற்ற கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது-

இந்த கூட்டம் கட்சி தொண்டர்கள் கும்பமேளாவாக இருக்கிறது. 2017, 2014 தேர்தல்களில் வெற்றி பெற்றதைப் போன்று 2019-மக்களவை தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும்.

உத்தர பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த மாநிலம் தேசிய அரசியலில்  கவனிக்கப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக 23 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. அக்கட்சியில் உள்ள 13 தலைவர்களுக்கு பிரதமர் ஆகும் ஆசை இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.  துணை முதல்வர் தினேஷ் சர்மா பேசுகையில், ''வரவிருக்கும் மக்களவை தேர்தல் பாஜகவும் மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே நடைபெறும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவை கண்டு பயப்படுகின்றன. அனைத்து சமூக மக்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்'' என்றார்.

Advertisement
Advertisement