This Article is From Jun 12, 2019

கொல்கத்தாவில் பாஜகவினர் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு!

கொல்கத்தாவில் இன்று பாஜக பிரமுகர் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜகவினர் காவல் தலைமை அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது தடியடி நடத்தினர்.

Kolkata:

கொல்கத்தாவில் காவல்துறை தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைய முயன்ற பாஜகவினர் மீது கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்தனர்.

அண்மையில் நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில், மேற்குவங்கத்தில் பாஜக 18 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் அம்மாநிலத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே ஆங்காங்கே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் பரிஷத் மக்களவைத் தொகுதியில் கடந்த சனிக்கிழமையன்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வெற்றி பேரணியின் போது கலவரம் மூண்டது. பல இடங்களில் பாஜக கொடி கம்பங்கள் அகற்றப்பட்ட நிலையில், பல கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த வன்முறையின்போது பாஜகவைச் சேர்ந்த இருவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர். பலரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத்தொர்ந்து, மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆம் தேதி (திங்கள்கிழமையன்று) 'பந்த்' போராட்டம் நடைபெற்றது. மேலும், 12ஆம் தேதி தலைமை காவல் நிலையம் நோக்கி பேரணி செல்லவும் ஆதரவாளர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்தது.

tpdsvdgg

அதன்படி, கொல்கத்தாவில் இன்று பாஜக பிரமுகர் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜகவினர் காவல் தலைமை அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது போலீசாரின் தடுப்பையும் மீறி காவல்துறை தலைமை அலுவலகத்தில் பாஜகவினர் அத்துமீறி நுழைய முயன்றனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் அவர்களை கொல்கத்தா போலீசார் கலைத்தனர்.

இதுதொடர்பாக மாநில பாஜக தலைமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மாநில பாஜகவினர் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மேற்குவங்க அரசிற்கு, மத்திய அரசு கடிதம் அளித்தது. அந்த கடிதத்தில், தொடரும் வன்முறை தொடர்பாக கடும் கவலை தெரிவித்தது. மேலும், மம்தா பானர்ஜி அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக கடைபிடிக்க தவறிவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய அரசு அளித்த கடிதத்திற்கு பதிலடியாக மேற்கு வங்க அரசு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

.