This Article is From Nov 23, 2018

கராச்சியில் உள்ள சீன தூதரகம் மீது தாக்குதல்: 2 பேர் பலி!

பாகிஸ்தானின் தெற்கு கடலோர நகரமான கராச்சியில் உள்ள சீன தூதரகத்தை, துப்பாக்கிகள் கொண்டு மர்ம நபர்கள் தாக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சியில் உள்ள சீன தூதரகம் மீது தாக்குதல்: 2 பேர் பலி!

இந்த சம்பவத்தில் 2 போலீஸார் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ISLAMABAD:

பாகிஸ்தானின் தெற்கு கடலோர நகரமான கராச்சியில் உள்ள சீன தூதரகத்தை, துப்பாக்கிகள் கொண்டு மர்ம நபர்கள் தாக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 2 போலீஸார் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிகளுடன் 4 நபர்கள் சீன தூதரகத்திற்குள் நுழைய முயன்றனர் என்றும், அவர்களை பாதுகாப்புக்காக இருந்த காவலர்கள் தடுத்தனர் என்றும் உள்ளூர் போலீஸ் ஜாவித் அலாம், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும், 'இந்த சம்பவத்தில் 2 கான்ஸ்டபிள்கள் பலியாகியுள்ளனர். ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திவிட்டு மர்ம நபர்கள் ஓடிவிட்டனர்.

அவர்கள் பக்கத்தில் எங்கேயாவது பதுங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. தூதரத்துக்கு அருகேயுள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டு அவர்கள் தேடப்பட்டு வருகிறார்கள்' என்று கூறியுள்ளார். 

சீனா, பாகிஸ்தானின் மிக நெருக்கமான கூட்டாளியாக உருவெடுத்து வரும் நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

.