Read in English
This Article is From Jan 14, 2019

'ரயில்களில் பொருத்தப்படும் எச்சரிக்கை விளக்கு'- மும்பையில் சோதனை!

சோதனை வெற்றி பெற்று விபத்துகள் குறைந்தால் இந்த நடைமுறை மேலும் சில ரயில்களில் பின்பற்றப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

Advertisement
Mumbai
Mumbai:

பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் முயற்சியாக மத்திய ரயில்வே துறை சார்பாக புதிய பாதுகாப்பு நடவடிக்கை அமலாக்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தின் கீழ் நீல நிற விளக்கு ஓன்று ரயில் கிளம்புவதற்கு முன் எரியும். இதன் மூலம் பயணிகள் அவசரமாக ரயில்களில் பயணம் செய்வதைத் தடுக்க முடியும் என எதிர்பார்கப்படுகிறது.

முதற்கட்ட நடவடிக்கையாக மும்பையில் இயங்கும் புறநகர் ரயில்களில் இந்த அபாய அறிவிப்பு விளக்குகள் பொருத்தப்படும்.

மேலும் இந்த விளக்குகளின் மூலம் ரயில் கிளம்பப்போகிறது என்ற எண்ணம் மனதளவில் பயணிகளுக்கு தோன்றும் என எதிர்பார்கப்படுகிறது. இந்த விளக்குகளால் ரயிலில் ஏறும் போது ஏற்படும் விபத்துக்கள் குறையும் என நம்பப்படுகிறது.

Advertisement

இந்த சோதனை வெற்றி பெற்று விபத்துகள் குறைந்தால் இந்த நடைமுறை மேலும் சில ரயில்களில் பின்பற்றப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

Advertisement