This Article is From Oct 19, 2018

#MeToo விவகாரம்: திரைப்பட சங்கத்தின் கேள்விக்கு நானா படேகர் விளக்கம்!

சி.ஐ.என்.டி.ஏ.ஏ என்கின்ற திரைப்பட சங்கம் தனுஸ்ரீயின் புகார் குறித்து நானா படேகரிடம் விளக்கம் கேட்டது

#MeToo விவகாரம்: திரைப்பட சங்கத்தின் கேள்விக்கு  நானா படேகர் விளக்கம்!

#MeToo விவகாரம் இந்த குற்றச்சாட்டுக்கு பின்னர் தான் விஸ்வரூபம் எடுத்தது

New Delhi:

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, பிரபல நடிகர் நானா படேகருக்கு எதிராக பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இது இந்திய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி #MeToo விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவும் வித்திட்டது.

இந்நிலையில் சி.ஐ.என்.டி.ஏ.ஏ என்கின்ற திரைப்பட சங்கம் தனுஸ்ரீயின் புகார் குறித்து நானா படேகரிடம் விளக்கம் கேட்டது.

அதற்கு நானா படேகர் சார்பில், ‘தனுஸ்ரீ, நானா படேகர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. ஆதாரமற்றவை. சட்டபூர்வமாக அது எதிர்கொள்ளப்படும். மேலும், தனுஸ்ரீ தத்தா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் நானா படேகர், தனக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்து மிரட்டியதாக குற்றம் சுமத்தியிருந்நார் தனுஸ்ரீ.

இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் #MeToo விவகாரம் இந்த குற்றச்சாட்டுக்கு பின்னர் தான் விஸ்வரூபம் எடுத்தது. தனுஸ்ரீ வெளிப்படையாக தனது அனுபவத்தைப் பகிர்ந்த பின்னர் பல பாலிவுட் நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. 

மத்திய அமைச்சராக இருந்த அக்பர் மீதும் பலர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இதனால், அவர் பதவி விலகினார்.

.