This Article is From Jun 14, 2020

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை!

34 வயதான இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் சுயசரிதை படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை!
New Delhi:

மும்பையில் பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 34 வயதான இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் சுயசரிதை படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த நடிகருக்கு பாலிவுட் திலையுலம் அஞ்சலி செலுத்த தொடங்கியுள்ளது. “உண்மையில் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியையும், வார்த்தைகளால் விவரிக்க முடியதாத உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. சிச்சோர் திரைப்பட இயக்குநரும் எனது நண்பருமான சஜித், சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு திறமையான நடிகர் என்றும், அவர் சிச்சோர் திரைப்படத்தில் அபரமாக நடித்துள்ளார் என்றும் என்னிடம் கூறியிருந்தார். அவரது குடும்பத்திற்கு கடவுள் தைரியம் கொடுக்கட்டும்.“ என பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ட்வீட் செய்துள்ளார். “இது மிக துன்பகரமான இழப்பு“ என அஜய் தேவ்கன் ட்வீட் செய்துள்ளார். “இவருடைய மரணம் என்னை சொல்ல முடியாத வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது“ என ரித்தீஷ் தேஷ்முக் கூறியுள்ளார்.

முன்னதாக, ஒரு வாரத்திற்கு முன்னர் சுஷாந்த்தின் முன்னாள் மேலாளரான திஷா சாலியன் தற்கொலை செய்து கொண்டபோது, “இது மிக மோசமான செய்தி“ என தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார். கடைசியாக, மறைந்த தன்னுடைய தாய்க்கு இரங்கலை பதிவிட்டிருந்தார்.

பாட்னாவை பூர்வீகமாக கொண்ட சுஷாந்த், புதுடெல்லியில் பொறியியல் படித்து முடித்து தொலைக்காட்சிகளில் நடிக்கத் தொடங்கினார். பாலாஜி சோப் பவித்ரா ரிஷ்டாவில் முதல் முறையாக நட்சத்திரமாக நடிக்கத்தொடங்கினார்.

.