This Article is From Mar 18, 2019

முதல்வர் எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!

சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் அழைப்பு வந்ததை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை தொலைபேசியில் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டனர்.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லாததால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல் புரளி என தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, மிரட்டல் விடுத்த நபரை உடனடியாக போலீசார் பிடித்தனர். அவரிடம் பள்ளிக்கரணையை சேர்ந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் பெயர் சுந்தர் ராஜன் என்பதும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

.