Read in English
This Article is From Mar 28, 2020

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது!!

நேற்று முன்தினம் இங்கிலாந்து இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனுமான சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Advertisement
உலகம் Edited by

போரிஸ் ஜான்சன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Highlights

  • 24 மணிநேரமாக இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது
  • இன்று போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • வீடியோ கான்பரன்சிங் மூலம் கொரோனா தடுப்பு பணிகளை பிரதமர் கவனிப்பார்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது என்பது இதுவே முதன்முறை.

நேற்று முன்தினம் இங்கிலாந்து இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனுமான சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. 

இதுகுறித்து போரிஸ் தனது ட்விட்டர் பதிவில், 'கடந்த 24 மணி நேரமாக எனக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இப்போது நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். இருப்பினும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நான் வழி நடத்துவேன். நாம் ஒன்றிணைந்து இந்த கொரோனாவை விரட்டி அடிப்போம். உயிர்களைக் காக்க வீட்டிலேயே இருங்கள்' என்று கூறியுள்ளார். 

Advertisement

.


உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5.50 லட்சமாகவும், பலியானோரின் எண்ணிக்கை 24, 871 ஆகவும் உள்ளது.

Advertisement

இங்கிலாந்தை பொறுத்தளவில் 11,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 578 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை எதிர்கொள்வதில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்டவை பின்னடைவை சந்தித்து வருகின்றன. 

Advertisement