This Article is From Oct 16, 2019

BSNL ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்பு ஊதியம் வழங்கப்படும்

பி.எஸ்.என்.எல் மாதத்திற்கு சம்பளம் ரூ. 850 கோடி வழங்குகிறது. தன் சேவையின் மூலம் ஈட்டும் வருவாய் ரூ. 1,600 கோடி. சம்பளத்தை ஈடுகட்ட இந்த தொகை போதுமானதாக இல்லை.

BSNL ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்பு ஊதியம் வழங்கப்படும்

BSNL மாதத்திற்கு சம்பளம் ரூ. 850 கோடி வழங்குகிறது (Representational)

New Delhi:

பி.எஸ்.என்.எல்  ஊழியர்கள் தாமதமாக சம்பளம் வழங்குவதால் ஒருநாள் உண்ணாவிரதம்  இருக்கப்போவதாக அச்சுறுத்திய நிலையில், 1.76 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாக சம்பளம் வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தீபாவளிக்கு முன்னர் ஊழியர்களுக்கு எங்கள்  சொந்த சம்பளத்தை வழங்குவோம்.  சேவைகளிலிருந்து ஒரு மாதத்திற்கு ரூ. 1,600 கோடி வருவாய் ஈட்டுகிறோம் என்று பி.எஸ்.என்.எல் தலைவரும் எம்.டியுமான பி.கே.பார்வார் ஐ.ஏ.என்.எஸ் செய்தியிடம் கூறியுள்ளார். பி.எஸ்.என்.எல் மாதத்திற்கு சம்பளம் ரூ. 850 கோடி வழங்குகிறது. தன் சேவையின் மூலம் ஈட்டும் வருவாய் ரூ. 1,600 கோடி. சம்பளத்தை ஈடுகட்ட இந்த தொகை போதுமானதாக இல்லை. ஏனெனில் வருவாயில் பெரும்பகுதி செயல்பாட்டு செலவுகள் மற்றும் சட்டரீதியான கொடுப்பனவுகளுக்கு தேவைப்படுகிறது. 

பொதுத்துறை நிறுவனம் அரசாங்க உத்தரவாதங்கள் மூலம் வங்கியில் இருந்து நிதிதிரட்ட முயற்சிக்கிறது. அது இன்னும் கிடைக்கவில்லை.

நிதியாண்டு 2019ன் படி 13,804 கோடி நிகர இழப்பை பதிவு செய்துள்ளது. பணியாளர்களைக் குறைக்க ஒரு தன்னார்வ ஓய்வுதியத் திட்டம் அதன் நிதி நெருக்கடியைக் குறைக்கலாம். ஆனால் அதற்கு நீண்ட காலம்  ஆகும். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.