Read in English
This Article is From Feb 01, 2020

மஞ்சள் நிற பட்டுப் புடவை, துணிப்பையுடன் வந்து அசத்திய நிர்மலா சீதாராமன்!

Budget 2020: தனது முன்னோடிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரம்பரிய பட்ஜெட் பிரீஃப்கேஸை கடந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் கைவிட்டதால் பாஹி கட்டா அறிமுகமானது.

Advertisement
இந்தியா Edited by

Budget 2020: குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தைச் சந்தித்தபோது, ​​சிவப்பு துணியால் ஆன ஃபைல் கொண்டு சென்றார், மஞ்சள் பட்டுப் புடவை அணிந்திருந்தார்.

New Delhi:

மத்திய பட்ஜெட் 2020க்கு முன்னதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை கடந்த ஆண்டை போலவே தனது பட்ஜெட் ஆவணங்களை மீண்டும் ஒரு பாரம்பரிய சிவப்பு "பாஹி கட்டா" அல்லது துணி லெட்ஜரில் எடுத்துச் சென்றார். அவர் நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தைச் சந்தித்தபோது, ​​சிவப்பு துணியால் ஆன ஃபைல் கொண்டு சென்றார், மஞ்சள் பட்டுப் புடவை அணிந்திருந்தார்.

தனது முன்னோடிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரம்பரிய பட்ஜெட் பிரீஃப்கேஸை கடந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் கைவிட்டதால் பாஹி கட்டா அறிமுகமானது.

"பட்ஜெட் ஆவணங்களை எடுத்துச் செல்ல நான் ஏன் தோல் பையை பயன்படுத்தவில்லை? பிரிட்டிஷ் ஹேங்கொவரில் இருந்து நாங்கள் சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டிய முக்கியமான நேரம் என்று நான் நினைத்தேன். அதை எடுத்துச் செல்வதும் எனக்கு எளிதாக உள்ளது" என்று அப்போது செய்தியாளர்களிடம் திருமதி சீதாராமன் தெரிவித்திருந்தார்.

Advertisement

"அரசாங்கம் இந்திய பாரம்பரியத்தை பின்பற்றுகிறது, பாஹி கட்டா மேற்கத்திய சிந்தனையின் அடிமைத்தனத்திலிருந்து நாம் வெளியேறுவதை குறிக்கிறது" என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் ANI இடம் தெரிவித்திருந்தார்.

வரையறையின்படி, பட்ஜெட் ஒரு "தோல் பையுடன்" இணைக்கப்பட்டுள்ளது. "பட்ஜெட்" என்ற சொல் பிரெஞ்சு "பூகெட்" (bougette) அல்லது தோல் பையில் இருந்து உருவானது.

Advertisement

"இது பட்ஜெட் அல்ல, ஆனால் ஒரு பாஹி கட்டா (லெட்ஜர்)" என்று திரு சுப்பிரமணியன் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, திருமதி சீதாராமன் தோல் தயாரிப்புகள் இந்த சந்தர்ப்பத்தில் நல்லதல்ல என்று நம்பினார்.

Advertisement

இந்தியாவின் நிதி அமைச்சர்கள் எப்போதும் சிவப்பு, கருப்பு, பழுப்பு அல்லது பழுப்பு சம்மந்த நிறமான பிரீஃப்கேஸ்களை எடுத்துச் சென்றிருந்தனர், இது பிரிட்டிஷ் பாரம்பரியம்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆண்டு திருமதி சீதாராமன் ஒரு பாஹி கட்டாவை தேர்வு செய்ததை கேலி செய்ததோடு, "எதிர்காலத்தில் ஒரு காங்கிரஸ் நிதி அமைச்சர் ஒரு ஐபாட் கொண்டு வருவார்" என்றும் குறிப்பிட்டார்.

Advertisement