This Article is From Sep 01, 2018

சேலத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… 7 பேர் பலி!

சேலத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்

சேலத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… 7 பேர் பலி!
Coimbatore:

சேலத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். அதில் இரண்டு பெண்களும் அடங்குவர். மேலும், இந்த கோர விபத்தில் 30 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இன்று அதிகாலை 2 மணி அளவில், சேலத்திலிருந்து கிருஷ்ணகிரியை நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலைக்கு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த மினி வேன் ஒன்றின் மீது பேருந்து உராசியுள்ளது. இதனால் சற்று நிலைகுலைந்த பேருந்து, எதிரில் வந்த இன்னொரு பேருந்து மீது மோதியுள்ளது.

இப்படி நேருக்கு நேர் பேருந்துகள் மோதியதால், சேலத்திலிருந்து வந்த பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதனால், 7 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த கோர விபத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். 
 

.