பஸ் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 15 பேராவது உயிரிழந்திருக்கலாம்
Hyderabad: ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று பயங்கரமான விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் பஸ் விழுந்ததில் 15-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கொண்டகாட்டுவில் இருந்து ஜகிடாலை நோக்கி சுமார் 40 பேருடன் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஷைனிவரபேட் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பள்ளத்திற்குள் பஸ் விழுந்தது.
இதனால் பேருந்துக்குள் இருந்தவர்கள் அலறித் துடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். படுகாயம் அடைந்த 20-க்கும் அதிகமானோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஜகிடால் மாவட்ட ஆட்சியர் ஏ. ஷரத் கூறும்போது, “ காலை 11.45-க்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. குறைந்தது 15 பேராவது இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம். 20 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். அவர்களை வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளோம் என்றார்.