This Article is From Nov 25, 2018

கால்வாயில் பஸ் கவிழ்ந்து விபத்து : கர்நாடகாவில் 25 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் பஸ் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15-பேர் உயிரிழந்தனர்

கால்வாயில் பஸ் கவிழ்ந்து விபத்து : கர்நாடகாவில் 25 பேர் உயிரிழப்பு

கால்வாயில் விழுந்த பஸ்ஸை பொதுமக்கள் மீட்கும் காட்சி

Mandya:

கர்நாடக மாநிலத்தில் பஸ் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 - பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இந்த விபத்து நேரிட்டது. சுமார் 30 முதல் 35 பேர் இந்த பேருந்தில் இருந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்ததாக தகவல்கள் தெரிவக்கின்றன.

வேகமாக வந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. கால்வாய்க்குள் விழுந்ததால் பயணிகளால் வெளியே வர முடியவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகரித்திருக்கிறது.

விவசாய பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதனைப் பார்த்த விவசாயிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மாண்டியாவின் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்களை தொடர்பு கொண்டுள்ள கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

.