This Article is From Apr 22, 2020

கணிசமாக அதிகரிக்கும் கொரோனா! பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அவசர ஆலோசனை

மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஊரடங்கு நடவடிக்கை குறித்து மோடி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.

கணிசமாக அதிகரிக்கும் கொரோனா! பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அவசர ஆலோசனை

சமூக விலகலுடன் மோடி தலைமையில் முன்பு நடந்த அமைச்சரவை கூட்டம்.

ஹைலைட்ஸ்

  • கொரோனாவை கட்டுப்படுத்த நாட்டில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
  • ஊரடங்கு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்
  • கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தகவல்
New Delhi:

நாட்டில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. 

இந்த கூட்டத்தில் கொரோனாவை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பலன்கள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. 

சுமார் 21 நாட்கள் ஊரடங்குக்கு பின்னர் நேற்று முதல் கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது. இதன்படி குறிப்பிட்ட சில மாநிலங்களில் வர்த்தகம், தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என்றும், மே 3-ம்தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என மாநில அரசு அறிவித்திருக்கிறது. 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
இதற்கிடையே, கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள உதவும் ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகளால், 2 நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

விரைவாக பரிசோதிக்க உதவும் ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும்போது, முடிவுகள் தவறாக வருவதாக ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் புகார் தெரிவித்துள்ளன.

5.4 சதவீத அளவுக்கு மட்டுமே ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகளின் முடிவுகள் துல்லியமாக உள்ளதென ராஜஸ்தான் அரசு புகார் கூறியுள்ளது.

ஏற்கனவே பல ஆயிரம்பேருக்கு ரேப்பிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களில் ஏராளமானோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. இந்த நிலையில் சுமார் 6 சதவீதம் மட்டுமே அவை நம்பகத்தன்மை வாய்ந்தவை என சில மாநிலங்கள் புகார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

.