This Article is From Feb 05, 2019

‘ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை அழித்துவிடலாம்!’- விஷாலின் ப்ளான்

இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்தார் விஷால்

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க ஒரே நாள் போதும், விஷால் பேச்சு

Highlights

  • முதல்வரை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் விஷால்
  • தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க அரசு உதவி செய்ய வேண்டும், விஷால்
  • தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் முதல்வரை விஷால் சந்தித்துள்ளார்

தமிழ் திரைப்படங்களை வெளியாகும்போதே, இணையதளத்தில் லீக் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தை ஒரே நாளில் அழித்துவிடலாம் என்றும் அதற்குரிய திட்டத்தையும் நடிகர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவை கௌரவப்படுத்தும் நோக்கில், ‘இசையராஜா 75' என்ற தலைப்பு கொண்ட நிகழ்ச்சி, சென்னையில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொடுத்தவர் விஷால்.

இளையராஜா விழா நடத்தப்படக் கூடாது என்று பல்வேறு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதும், அனைத்துத் தடைகளையும் தாண்டி நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. இதையடுத்து, நிகழ்ச்சிக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் விஷால். 

Advertisement

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய விஷால், ‘இளையராஜா விழாவுக்கு சிறப்பான பாதுகாப்பு கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி சொல்லவே இங்கு வந்தேன். 

தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க ஒரே நாள் போதும். தமிழக அரசு நினைத்தால் அவர்களை இன்றே அழித்துவிடலாம். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நான் இன்று முதல்வரிடத்திலே கூறியுள்ளேன்' என்றார். 

Advertisement

 

Advertisement