This Article is From Jan 12, 2019

வாஜ்பாயுடன், மோடியை ஒப்பிடுவதா? வைகோ பேட்டி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், மோடியை ஒப்பிட முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

இதுகுறித்து நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்து உள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களையே நடைமுறைப்படுத்தி விட்டு, தற்போது மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற தந்திரத்தில் செயல்படுகிறார். மக்கள் அவரை பற்றி நன்றாக புரிந்து வைத்து உள்ளனர். அவருடைய ஆட்சி 2019ம் ஆண்டு இறுதி வரை நடக்குமா என்பதே சந்தேகம்தான்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், மோடியை ஒப்பிட முடியாது. வாஜ்பாய் நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டியவர். ஆனால் மோடி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களிடையே இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை திணித்து வருகிறார். தமிழக மக்களுக்கு நல்ல திட்டம் எதையும் கொண்டு வரவில்லை. அழிக்கக்கூடிய திட்டங்களை தான் கொண்டு வருகிறார்.

மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இதனால் நடுத்தர மக்களும், விவசாயிகளும், வியாபாரிகளும் வெறுப்பில் உள்ளனர். எனவே பாஜக கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் 140 இடங்கள் கூட கிடைக்காது. படுதோல்வி அடையும் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement