தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார் தேமுதிக-வின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் (Vijayakanth).
இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து கழக பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த், வரும் 19.10.2010 தேதியில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார் விஜயகாந்த். இந்நிலையில் அவரது கம்-பேக் தேமுதிக-வினரை உற்சாகப்படுத்தியுள்ளது. சமீப காலமாக தேமுதி மேடைகளில் விஜயகாந்த் வந்தாலும், அவரால் சரிவர பேச முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.