This Article is From Nov 18, 2018

சாலையில் நின்ற பயணிகள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு !

படுகாயம் அடைந்தவர்களில் இரண்டு இளம் பெண்கள் உட்பட நான்கு பேரும் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சாலையில் நின்ற பயணிகள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு !
Thane:

மஹாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று நாஷிக் நகரத்திற்க்கு செல்வதற்க்காக காத்திருந்த பயணியர் மீது கார் மோதியதில் 16 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

‘காலை சரியாக 7 மணியளவில் நடந்த இவ்விபத்தில், உயிரிழந்தவர்களுடன் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் நடந்தவுடன் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக' காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

‘சம்பவம் அறிந்து போலீஸார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தபோதே நான்கு பேர் இறந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

படுகாயம் அடைந்தவர்களில் இரண்டு இளம் பெண்கள் உட்பட நான்கு பேரும் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று பார்வையிட்ட எம்.எல்.ஏ. பாண்டுரங் பாரோரா ‘கார் மோதியதில் சிலர் பாலத்திலிருந்து கீழே விழுந்ததாகவும் கூறினார்.

 

.