Read in English
This Article is From May 15, 2019

சர்ச்சை பேச்சு: கமலுக்கு எதிரான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!

சர்ச்சைக்குரிய வகையில் கமல் பேசியதாக அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement
இந்தியா Written by

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிறன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொல்லியதற்காக கமலின் நாக்கை வெட்ட வேண்டும். தீவிரவாதிகளுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என எந்த மதமும் கிடையாது. கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து அஸ்வினி உபாத்யாயா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisement

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் கமல் பேசியதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதானே எனவும் மனுதாரருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் பேசியது கடுமையான தேர்தல் விதி மீறல் என்பதால் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினோம் என்று மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. தொடர்ந்து, கமல்ஹாசன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையமும் தங்கள் தரப்பில் இருந்து விளக்கத்தை முன்வைத்தது. இதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
Advertisement