Read in English
This Article is From Dec 11, 2018

ராஜஸ்தான் தேர்தல்: இருவரைத் தாக்கி வாகனங்களுக்கு தீ வைத்த பாஜக பிரமுகர் கைது!

மூத்த பாஜக தலைவர் தேவி சிங் பாட்டியா மற்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்

Advertisement
இந்தியா
Bikaner:

இரண்டு நபர்களை தாக்கியதற்காகவும் அவர்களின் வண்டிகளுக்கு தீ வைத்தற்காகவும் மூத்த பாஜக தலைவர் தேவி சிங் பாட்டியா மற்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் மாநில அமைச்சராக இருந்த தேவி சிங் பாட்டியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து லக்ஷன் சிங் மற்றும் கான்பாட் ராம் அகியவரை கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி தாக்கினர். அத்துடன் அவர்களின் வாகனத்திற்க்கு தீ வைத்ததால் (தேவி சிங் பாடி, விஷ்வாதிஜித் சிங், ஜாலாம் சிங், ராகேஷ் மாதுர், ராஜூ மோடி, விஷ்ணு ஜோஷி மற்றும் உதாய்பான்) ஆகிய நபர்களை காவல்துறை கைது செய்தது.

‘புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளோம், விசாரணைக்கு பிறகே பிற தகவல்கள் தெரியும்' என போலீஸ் அதிகாரி விக்ராம் சிங் தெரிவித்தார்.

Advertisement