ஹாலோவீனுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இணைத்தின் எத்திசையிலும் பயத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், இப்போது இணையத்தில் வேறு ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
அப்புகைப்படத்தில் உள்ளது காகமா அல்லது பூனையா என்பதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், ஒளியியல் மாயை தான் இந்தக் குழப்பத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. உற்று கவனித்தால் மட்டுமே இந்த வேறுபாட்டை அறிய மூடியும் எனவும் அப்புகைபடத்தில் இருப்பது ஒரு பூனை எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
1 லட்சத்துக்கும் மேல் லைக்குகள் டிவிட்டரில் வந்த நிலையில், இதை வெளியிட்ட ராபர்ட் மக்குரி கூறுகையில் ‘அந்த புகைப்படத்தில் உள்ள காகத்தை பார்க்க ஏன் ஆர்வமாக உள்ளது என்றால், அது ஒரு பூனை' எனப் பதிவிட்டுள்ளார்.
நீங்கள் அதை பார்த்தீர்களா?
இந்தப் புகைப்படம் சிலருக்கு இதைபோலவே வந்த வேரொரு ஒளியியல் மாயைப் புகைப்படமான வாத்தையும் முயலையும் நினைவூட்டியது.
பலர் இதைக்கண்டு வியந்தனர்.
சிலர் ஜோக்குகளையும் பதிவு செய்தனர்.
ஒளியியல் மாயை பிடிக்கும் என்றால், மேலும் இதுபோன்ற புகைப்படங்கள் பல வரவுள்ளன.