Read in English
This Article is From Oct 29, 2019

INX Case - கிடைத்த ஒரு பிணையிலும் சிக்கல்… P Chidambram-க்கு எதிராக சிபிஐ-யின் அடுத்த மூவ்!

INX media case - ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 74 வயதாகும் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Advertisement
இந்தியா Edited by

சிபிஐ வழக்கில் பிணை கிடைத்தபோதும், அமலாக்கத் துறை கைதால் P Chidambaram-ல் சிறையிலிருந்து வெளியே வரமுடியவில்லை.

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் (INX Media Case) அமலாக்கத் துறையின் (ED) பிடியில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு(P Chidambram), சிபிஐ (CBI) தொடர்ந்திருந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிலிருந்து சில நாட்களுக்கு முன்னர் பிணை கிடைத்தது. தற்போது சிபிஐ விசாரணை அமைப்பு, பிணை மனுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 74 வயதாகும் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை அமலாக்கத்துறையினர் கடந்த வாரம் கைது செய்தனர். சிபிஐ வழக்கில் பிணை கிடைத்தபோதும், அமலாக்கத் துறை கைதால் அவரால் சிறையிலிருந்து வெளியே வரமுடியவில்லை.

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது.

கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி, சிபிஐ தொடர்ந்திருந்த ஐ.என்.எக்ஸ் வழக்கில், சிதம்பரத்துக்கு பிணை கொடுத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆனால், அவர் அமலாக்கத் துறையின் பிடியில் இருப்பதால், தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். அவரை அக்டோபர் 30 ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில்தான், சிபிஐ, சிதம்பரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. 

Advertisement
Advertisement