முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் சிபிஐ கொல்கத்தா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான குற்றவாளிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மனைவி நளினி வழக்கறிஞராக இருந்தார். இதில் ரூ.1.35 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து நளினி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நளினி சிதம்பரம் மீது இன்று சிபிஐ கொல்கத்தா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
COMMENTS
Advertisement