டெல்லியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
New Delhi: டெல்லியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 10,12-ம் வகுப்பு பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்டணம் ரூ. 750-லிருந்து ரூ. 1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ. 375-ல் இருந்து ரூ. 1,200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் 5 பாடங்களுக்கு உரியதாகும்.
இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'டெல்லி அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை செலுத்தும்' என்று மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்று டெல்லி பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.
10 மற்றும் 12-ம் வகுப்புக்கு தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதைப் போன்று 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பதிவுக்கான கட்டணத்தை சி.பி.எஸ்.இ. உயர்த்தியுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)