This Article is From Dec 21, 2019

தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Edited by

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாகவே கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும், வடதமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அங்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement
Advertisement