This Article is From Apr 08, 2020

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை  வானிலை ஆய்வு மையம் கூறியதாவது,

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. தமிழகத்தில் ஆங்காங்கே 30-40 கிமீ வேகத்தில் சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

.