சென்னையில் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வந்த 11 வயதுப் பெண் பல மாதங்களாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த திடுக்கிடும் சம்பவம் தொடர்பாக 17 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத அந்தப் பெண்ணை, அடுக்கமாடி கட்டடத்தில் வேலை செய்த வந்த வாட்ச்மேன், லிஃப்ட்மேன் மற்றும் தண்ணீர் சப்ளையர் உள்ளிட்ட பலர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி வந்ததாக தகவல் கூறப்படுகிறது.
போலீஸ் கைது செய்துள்ளதில் லிஃப்ட்மேன், தண்ணீர் சப்ளையரும் அடக்கம் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறத்தல் நடந்துள்ளதாக தெரிகிறது. மேலும், அந்தப் பெண்ணுக்கு நடக்கும் கொடூரம் குறித்து வெளியே சொல்லக் கூடாது என்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மிரட்டியுள்ளனர்.