This Article is From Oct 31, 2019

சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் உள்ள தவறு தான் என்ன?

2015 யில் பிசினஸ்மேன் ஜஸ்டின் ராஸ் லீ இந்த புகைப்படத்தை எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்ததாக யூபிஐ தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் உள்ள தவறு தான் என்ன?

இணையதளத்தில் வைரலான புகைப்படம் இது தான்

இந்திய திரைப்பட நடிகையான சாபனா ஆஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் பதிவை பகிர்ந்திருந்தார். சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையே அந்த புகைப்படம். ஹிந்தியில் சரியாகவும் ஆங்கிலத்தில் தவறாகவும் உள்ளது அந்த அறிவிப்பு.

அந்த அறிவிப்பு பலகையில் ‘கம்பளத்தை உண்பது தடைசெய்யப்பட்டுள்ளது' என இருந்தது. ஆனால் அதன் உண்மையான அறிவிப்போ ‘கம்பளத்தில் அமர்ந்து உண்பது தடை செய்யப்பட்டுள்ளது' என்று இருக்க வேண்டும். அமர்ந்து என்ற ஒற்றை வார்த்தை இல்லாததால் அறிவிப்பின் முழு பொருளும் மாறியுள்ளது.இந்த புகைப்படமானது 2015 யில் கிளிக் செய்யப்பட்டது.

Really ?!!!

A post shared by Shabana Azmi (@azmishabana18) on

இணையதளத்தில் பகிரப்பட்ட இந்த புகைப்படம் பல லைக்குகளையும் கமண்ட்களையும் பெற்றுள்ளது.

‘அமேஸ்' என பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் கமண்ட் செய்துள்ளார். அறிவிப்பு பலகையில் உள்ள தவறை பலர் கமண்ட் செய்துள்ளனர்.

முதலாக 2015 யில் பிசினஸ்மேன் ஜஸ்டின் ராஸ் லீ இந்த புகைப்படத்தை எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்ததாக யூபிஐ தெரிவித்துள்ளது.

Click for more trending news


.