This Article is From Jun 12, 2020

சென்னை, கோவை, தேனி, திண்டுக்கல்லில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் தேவலாவில் அதிகபட்சமாக 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

சென்னை, கோவை, தேனி, திண்டுக்கல்லில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது
  • மேற்கு மாவட்டங்களில் தினமும் மழை பெய்து வருகிறது
  • தமிழக உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்குத் தென் மேற்குப் பருவக் காற்று காரணமாக கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் தேவலாவில் அதிகபட்சமாக 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆம்பூரிலும், நீலகிரி கூடலூர் பஜாரிலும் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்,' என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.