This Article is From Jul 23, 2020

சென்னையில் கொரோனா தொற்று: பாதிக்கப்பட்ட 82% பேர் டிஸ்சார்ஜ் - ஜூலை 23 விரிவான நிலவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 73,681 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்று: பாதிக்கப்பட்ட 82% பேர் டிஸ்சார்ஜ் - ஜூலை 23 விரிவான நிலவரம்!

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,029 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையிலேயே கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு அதிகம்
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
  • நேற்று ஒரே நாளில் சென்னையில் 1,731 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் நேற்று 5,849 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,171 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,86,492 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,910 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,31,583 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 51,765 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 74 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 2,700 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (23.07.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 450

மணலி - 206

மாதவரம் - 354

தண்டையார்பேட்டை - 723

ராயபுரம் - 933

திரு.வி.க நகர் - 1,131

அம்பத்தூர் - 926

அண்ணா நகர் - 1,656

தேனாம்பேட்டை - 1,176

கோடம்பாக்கம் - 2,029

வளசரவாக்கம் - 701

ஆலந்தூர் - 566

 அடையாறு - 1,157

பெருங்குடி - 403

சோழிங்கநல்லூர் - 331

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,199

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 73,681 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 82 சதவீத மீட்பு விகிம் ஆகும். 1,939 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 13,941 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,731 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,029 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திலும்  முறையே 1,656 மற்றும் 1,176 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 206 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 
 

.