This Article is From Jul 16, 2020

சென்னையில் மீண்டும் 1,200ஐ கடந்த கொரோனா பாதிப்பு - ஜூலை 16 மண்டலவாரி நிலவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64,036 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் மீண்டும் 1,200ஐ கடந்த கொரோனா பாதிப்பு - ஜூலை 16 மண்டலவாரி நிலவரம்!

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,219 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையிலேயே கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு அதிகம்
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
  • மீட்பு விகிதம் 79% ஆக உள்ளது

தமிழகத்தில் நேற்று 4,496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,291 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,51,820 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,000 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,02,310 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 47,340 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 2,167 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (16.07.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 642

மணலி - 264

மாதவரம் - 405

தண்டையார்பேட்டை - 957

ராயபுரம் - 1,101

திரு.வி.க நகர் - 1,059

அம்பத்தூர் - 930

அண்ணா நகர் - 1,574

தேனாம்பேட்டை - 1,477

கோடம்பாக்கம் - 2,219

வளசரவாக்கம் - 867

ஆலந்தூர் - 528

 அடையாறு - 1,065

பெருங்குடி - 339

சோழிங்கநல்லூர் - 395

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,784

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64,036 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 79 சதவீத மீட்பு விகிம் ஆகும். 1,318 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 15,606 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,494 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,219 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திலும்  முறையே 1,574 மற்றும் 1,477 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 264 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

.