বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 01, 2019

கண்ணை கட்டியபடி இசை... உலக அரங்கில் அசத்திய தமிழகச் சிறுவன்!

இசை திறமையால் ஏ.ஆர்.ரஹ்மானிடம் தம்ஸ் அப் வாங்கிய 13 வயதான சிறுவன், சென்னையை சேர்ந்த லைடியன் நாதஸ்வரம்

Advertisement
விசித்திரம் Edited by

எல்லன் ஷோவில் பாராட்டுகளை குவித்த 13 வயதான சிறுவன், சென்னையைச் சேர்ந்த லைடியன் நாதஸ்வரம்.

தன் இசைத் திறமையால் ஏ.ஆர்.ரஹ்மானிடம் தம்ஸ்-அப் வாங்கிய 13 வயதான சிறுவன், சென்னையைச் சேர்ந்த லைடியன் நாதஸ்வரம். உலக அரங்கில் ‘வேர்ல்ட்ஸ் பெஸ்ட்' என்னும் நிகழ்ச்சியில் கலக்கிய லைடியன், தற்போது எல்லன் ஷோவில் பங்கேற்றுள்ளார்.

உலக பிரசித்து பெற்றது எல்லன் ஷோ. இதில், லைடியன் தன் பியானோ வாசிக்கும் இசைத் திறமையை வெளிப்படுத்தினார்.

எல்லன் தன் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள வீடியோவில், கண்கள் கட்டியபடி பியானோ வாசித்து அசத்தியுள்ளான் லைடியன். மேலும் தன்னால் ஒரே நேரத்தில் இரு வேறு பியானோவில் இரு வேறு பாடல்களை வாசிக்க முடியும் எனக் கூறியுள்ளான் அந்த சிறுவன்.

 

 
 

 

Advertisement

‘ஒரு பியானோவில் மிஷன் இம்பாசிபில் படத்தின் இசையை வாசித்தபடியே, மற்றொரு பியானோவில் ஹாரி பாட்டர் படத்தின் இசையை என்னால் வாசிக்க முடியும்' எனக் கூறிய லைடியன், எல்லன் ஷோவில் கண்ணை  துணியால் கட்டியபின் ‘தர்கிஷ் மார்ச்' இசையை பியானோவில் வாசித்து அங்கிருந்த அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார்.

பியானோ வாசிப்பது மட்டுமின்றி, லைடியனால் கிட்டார், டப்லா, மிருதங்கம் ஆகிய இசைக் கருவிகளையும் வாசிக்க முடியும். 2 வயதில் இருந்தே இசை மீது தீரா காதல் கொண்ட லைடியன் முதலில் வாசிக்கத் துவங்கியது ட்ரம்ஸைத்தான்.

Advertisement

உலக அரங்கில் நம் தமிழ்நாட்டை மேலும் ஒருவர் பெருமை பட வைத்துள்ளது நம் அனைவருக்கும் ஒரு நற்செய்தியாகும்.

Advertisement