This Article is From Jan 31, 2019

ரயில் கழிவறையில் சிக்கிக்கொண்ட பெண்! என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த ரயிலின் கழிவறையில் சிக்கிய பெண்!

ரயில் கழிவறையில் சிக்கிக்கொண்ட பெண்! என்ன ஆச்சு தெரியுமா?

ஐதராபாத் வரை செல்லவிருந்த சார்மினார் விரைவு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றது.

Chennai:

சென்னையில் கடந்த செய்வாய்கிழமை மாலை ஐதராபாத்தை நோக்கி பயணிக்கவிருந்த சார்மினார் அதிவிரைவு ரயிலின் கழிவறையில் பெண் ஓருவரின் கால் சிக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சென்டிரலில் இருந்த புறப்பட வேண்டிய சார்மினார் ரயிலின் கழிவறையில் பெண் ஓருவரின் கால் சிக்கியது. அதைத்தொடர்ந்து அங்கு விரைந்த ரயில்வேத்துறை அதிகாரிகள், இருக்கையை வெட்டி சுமார் அரைமணி நேரமாக போராடி அப்பெண்ணை மீட்டனர். 

இந்த வினோதமான விபத்தை தொடர்ந்து அந்த ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பிட்டது. 

‘அவரின் கால் எப்படி கழிவறையில் சிக்கியது என்றும் தெரியவில்லை. கழிவறையின் இருக்கையை வெட்டி எரிந்த பிறகே அவர் மீட்கப்பட்டார்' என அதிகாரி ஓருவர் கூறினார். 

மேலும் விசாரணையில் அப்பெண் பயணி இல்லை என்பது தெரியவந்துள்ளது.
 

.