This Article is From Oct 17, 2018

தமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

மேலும், இலங்கை அரசின் செயல்பாடு தமிழக மீனவர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

 

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த மாதம் 21ம் தேதி தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். இலங்கை சிறையில் ஏற்கனவே, 8 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் 

இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கையில் உள்ள 16 மீனவர்களை மீட்க வேண்டும். இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள புது சட்டம் பாதிப்பாக உள்ளதாக கூறி, அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை அரசின் செயல்பாடு தமிழக மீனவர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

.