Read in English বাংলায় পড়ুন
This Article is From Nov 21, 2018

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு! - ஒருவர் கைது!

டெல்லி தலைமை செயலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் தூள் வீசப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக அணில் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
இந்தியா

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தலைமை செயலகத்தில் 3 தளத்தில் உள்ள தனது அறையில் இருந்து மதிய உணவுக்காக வெளியே வந்த நேரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சந்திரா கூறும் போது, இந்த தாக்குதல் சம்பவத்தின் போது முதல்வருக்கு  பின்னே தானும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி தனது டிவிட்டர் பதிவில், இது மிக மோசமான தாக்குதல். டெல்லியில் முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் காவல்துறையினரின் பாதுகாப்பு குறைப்பாடு இதற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
 

தாக்குதலில் ஈடுபட்ட அணில் குமார் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தின் போது மை கொண்டு தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement