বাংলায় পড়ুন Read in English
This Article is From May 27, 2020

எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்! போர் விமானங்களை நிறுத்தியுள்ள சீனா!!

இந்த நிலையில் நேற்று, டெல்லியில் உள்ள சீன தூதரகம், இந்தியாவில் உள்ள சீனர்கள் விருப்பப்பட்டால் சீனாவிற்கு தங்களது சொந்த செலவில் செல்ல ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்திருந்தது. 1999 காலக்கட்டங்களில் நடந்த இந்தியா சீனா மோதல்களுக்கு பிறகு மிகப் பெரிய உரசலாக இந்த பிரச்சனை தற்போது மேலெழுந்து வருகிறது.

Advertisement
இந்தியா
New Delhi:

கடந்த மே 5 மற்றும் 6 தேதிகளில் இந்திய ராணுவ படையினருக்கும் சீனா ராணுவ படையினருக்கும் சிறிய அளவில் பிரச்சனை மேலெழுந்தது. இதனைத் தொடர்ந்து பிரச்சனை தொடங்கிய இடமான பங்கோங் ஏரியிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள நகரி குன்சா விமான நிலையத்தினை சீனா மீண்டும் கட்டமைத்து போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கையானது இந்தியா சீனா இரு நாடுகளுக்கிடையேயும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஷேடோ ப்ரீக் இன்டெல்லின் ஆய்வாளரான ஓப்பன் சோர்ஸ் புலனாய்வு நிபுணர் டெட்ரெஸ்ஃபா_விடம் இருந்து பிரத்தியேகமாக பெறப்பட்ட இரண்டு படங்கள், பங்கோங் ஏரியிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள நகரி குன்சா விமான நிலையத்தின் செயற்க்கைக்கோள் படத்தினை தெளிவாக காட்டியுள்ளது. இரண்டு படங்களில் முதல் படம் இந்த ஆண்டு ஏப்ரல் 6 அன்றும், இரண்டாவது படம் மே 21 அன்றும் எடுக்கப்பட்டவையாகும். இந்த படங்களில் பெரிய அளவு வித்தியாசங்கள் உள்ளன. ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட படத்தினை காட்டிலும் மே மாதம் எடுக்கப்பட்ட படத்தில் இந்த விமான நிலையத்தின் கட்டமைப்புகள் மாற்றப்பட்டிருப்பது தெளிவாக தெரியவருகிறது. மட்டுமல்லாமல் இந்த தளத்தில் ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் நிறுத்தி வைத்திருக்கும் காட்சிகள் மிகத் தெளிவாக இரண்டாவது படத்தில் தெரிகின்றது.

இந்த ஆண்டு மே 21 தேதியிட்ட இரண்டாவது படம் (வலது) பாரிய கட்டுமான நடவடிக்கைகளைக் காட்டுகிறது.

செயற்கைக்கோளின் மூன்றாவது படத்தில் மேம்படுத்தப்பட்ட விமான நிலையத்தில் சீன மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் ஜே -11 அல்லது ஜே -16 ரக போர் விமானங்கள் நான்கு, வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருப்பதை இந்த படம் தெளிவுப்படுத்துகிறது.

இந்த ஜே -11 அல்லது ஜே -16 போர் விமானங்கள் ரஷ்யாவின் சுகோய் 27 ரக போர் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட அம்சமாகும். எப்படியாயினும் இது மிக் 19 மற்றும் மிக் 21 ரக போர் விமானத்தை விட மேம்பட்டதாகும். இந்திய விமானப்படையில் உள்ள சுகோய் 30 ரக போர் விமானங்களுக்கு இணையான திறன் கொண்டதாக இந்த ஜே -11 அல்லது ஜே -16 போர் விமானங்கள் கருதப்படுகிறது. நகரி குன்சா விமான தளத்தினை சீனா பயன்படுத்துகிறது என்பதை 2019ல் தான் முதலில் கண்டறியப்பட்டது. இந்த விமான நிலையம் இரு வேறு சேவைகளுக்காக  பயன்படுத்தப்படுகிறது. சிவில் விமான போக்குவரத்து சேவையாகவும், அதே நேரத்தில் போர் விமான நிறுத்தத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. 14,022 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் உலகில் மிக உயரமான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

இப்போது வெளியிடப்பட்ட நெருக்கமான படங்கள், போா் விமானங்களின் வகையை அடையாளம் காண உதவுகின்றன.

லைன் ஆப் கண்ட்ரோல் என்று அழைக்கப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த விமான தளத்தில் உள்ள விமானங்கள் பெரும்பாலும், போர் ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை கொண்டு செல்ல மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த ஜே -11 அல்லது ஜே -16 ரக போர் விமானங்களின் திறனானது ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது என முன்னாள் ஐ.ஏ.எஃப் போர் விமானியும் கார்கில் போர் வீரருமான படைத் தலைவர் சமீர் ஜோஷி (ஓய்வு பெற்றவர்) கூறியுள்ளார். இதே போல இந்திய போர்விமானங்கள் மூன்று மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள நம் நாட்டின் போர் விமானங்கள் சீன விமானங்களைக் காட்டிலும் அதிக திறன் கொண்டதாகும்.

Advertisement

சீனாவின் ராணுவ துறுப்புகள் லாடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 5 அன்று நடந்த மோதலுக்கு பிறகு அப்பகுதியில் சற்று பரபரப்பு காணப்படுகிறது. இந்தியா எல்லைக்கு அருகே உள்ள சாலை வசதிகளை மேம்படுத்தியதையடுத்து, சீன துறுப்புகள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். கால்வான் நதிப் படுகைக்கு வடக்கே சீன துறுப்புகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நதி படுகையானது இந்திய விமானப்படைக்கு சொந்தமான தவுலத் பேக் ஓல்டி விமான தளம் வரை செல்கிறது.

தற்போது மேலெழுந்துள்ள புதிக பிரச்சனைகள் குறித்து உள்ளூர் தளபதிகளிடையே கர்னல் பதவியில் இருந்து லடாக்கில் மேஜர் ஜெனரல் வரை பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன, ஆனால் தற்போது எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில் நேற்று, டெல்லியில் உள்ள சீன தூதரகம், இந்தியாவில் உள்ள சீனர்கள் விருப்பப்பட்டால் சீனாவிற்கு தங்களது சொந்த செலவில் செல்ல ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்திருந்தது. 1999 காலக்கட்டங்களில் நடந்த இந்தியா சீனா மோதல்களுக்கு பிறகு மிகப் பெரிய உரசலாக இந்த பிரச்சனை தற்போது மேலெழுந்து வருகிறது.

Advertisement