சீனாவில், பிப்ரவரி 5 –ம் தேதி, புது வருடத்தின் தொடக்கமாக கொண்டாடப்படும். அதனால் அங்குள்ள நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு போனஸ் வழங்க தொடங்கியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, சீனாவின் நான்சங் என்னும் இடத்தில் உள்ள இரும்பு நிறுவனம், தன் ஊழியர்களுக்காக பண மலை கட்டியுள்ளது. 300 மில்லியன் யுயன் (34 கோடி) மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அந்த பணமலை கட்டப்பட்டது.
பின் அவை 5000 ஊழியர்களுக்கு பங்கிட்டு அளிக்கப்பட்டது. அதன் மூலம் ஒரு ஊழியர் சுமார் 62 இலட்ச ரூபாயை வருட போனஸாக பெற்றார்.
Advertisement
இதே போல், சென்ற ஆண்டு மற்றொரு சீனா நிறுவனம், குறிப்பிட்ட நேரத்திற்குள் எவ்வளவு காசுகளை ஊழியர்கள் எடுக்கிறார்களோ அவை அனைத்தும் அந்த ஊழியருக்கே அளித்தது.
Advertisement
Advertisement
COMMENTS
Advertisement