This Article is From Dec 21, 2019

தேச விரோத உள்ளடக்கங்கள் இருக்கக் கூடாது - ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

“தேசிய விரோத மனப்பான்மையை ஊக்குவிக்கும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் காண்பிப்பதை தவிர்க்குமாறு” செய்தி சேனல்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தேச விரோத உள்ளடக்கங்கள் இருக்கக் கூடாது - ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

நாடு முழுவதும் புதிய குடியுரிமைச் சட்டம் தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருகிறது (Representational)

New Delhi:

நாடு முழுவதும் புதிய குடியுரிமைச் சட்டம் தொடர்பாக போராட்டங்கள் தொடர்ந்து வரும் வகையில் “தேசிய விரோத மனப்பான்மையை ஊக்குவிக்கும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் காண்பிப்பதை தவிர்க்குமாறு செய்தி சேனல்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த அறிக்கை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இரண்டாவது ஆலோசனையாகும். 

“மேற்கூறிய ஆலோசனை இருந்த போதிலும் சில தொலைக்காட்சி சேனல்கள் உள்ளடக்கத்தை ஒளிபரப்புகின்றன. அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் வன்முறையைத் தூண்டக்கூடிய அல்லது சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கு எதிராகவோ தேசிய விரோத மனப்பான்மையை ஊக்குவிக்கும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் காண்பிப்பதை தவிர்க்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. 

“தேசத்தின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் எந்தவொரு உள்ளடக்கமும், எந்தவொரு நபரையும் தனிப்பட்ட முறையிலோ அல்லது சில குழுக்களில் சமூக, பொது மற்றும் நாட்டின் தார்மீக வாழ்க்கையின் பகுதிகளை விமர்சித்தல், அவதூறு செய்தல் அல்லது அவதூறு பரப்புகிற உள்ளடக்கத்தை காட்டவேண்டாம் என்று தொலைக்காட்சி  சேனல்களைக் கொண்டுள்ளது. 

செய்தி அமைச்சகம் 10 நாட்களுக்குள் வெளியிட்ட இரண்டாவது அறிக்கையாகும். 

டிசம்பர் 11-ம் தேதி புதிய குடியுரிமைச் சட்டத்தை நாடாளுமன்றம் அனுமதித்தபோது முதல் ஆலோசனை வழங்கப்பட்டது.

.