Read in English
This Article is From Oct 19, 2018

கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி தற்கொலை முயற்சி!

மூன்றடுக்கு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி உயிருக்கு போராடி வருகிறார்

Advertisement
நகரங்கள்

மயக்க நிலையிலிருந்த போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

Patna:

ஒன்பதாம் வகுப்பு மாணவி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால், லக்கிசாரை மாவட்டத்தில் உள்ள 3 அடுக்கு கட்டடத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அதிக மின்னழுத்தம் உள்ள ஒயரின் மீது விழுந்தார். இதனால் அந்த மாணவி பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து, லக்கிசாரை போலீஸ் கண்காணிப்பாளர் கார்த்திகேய ஷர்மா கூறுகையில், மயக்க நிலையிலிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அதிக மின்னழுத்தம் உள்ள ஒயரின் மீது விழுந்துள்ளார். இதனால், பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடி வருகிறார்.

அந்த சிறுமி வியாழனன்று துர்கா நவமியின் போது நண்பர்களுடன் வெளியில் சென்றார். ஆனால் அவர் எவ்வாறு கட்டடத்தின் 3வது மாடியை அடைந்தார் என்பது தெரியவில்லை. என்று கூறினார்.

Advertisement

மேலும், மதுவை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்க தெளிந்த அச்சிறுமி தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அச்சிறுமியின் தோழி மற்றும் சந்தேத்தின் பேரில் ஒருவரும் கைது செய்யப்படுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

கட்டடத்தின் மாடியிலிருந்து பெண்களின் ஆடைகள் மற்றும் மது பாடில்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டுள்ளது. 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் ரோட்டினை மறித்து பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினர். பின்னர் அப்பகுதியை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Advertisement
Advertisement