கோயம்பத்தூரைச் சேர்ந்த ஒருவர், தந்திராமாக பல்பை திருடிய CCTV காட்சிகள் வலைதளத்தில் வைரலாகிறது. புதன்கிழமை காலை கோயம்பத்தூர் சேரன்மா நகரில் கடையின் வாசலில் இருந்த விளக்கை அடையாளம் தெரியாத நபர் திருடும் பொழுது கேமராவில் மாட்டிக் கொண்டார் என இந்தியா டூடே செய்தி வெளியிட்டது. இருப்பினும் CCTV கேமரா காட்சிகளை பார்க்கும் போது அவர் தினசரி உடற்பயிற்சி செய்வது போல் தெரிகிறது.
தமிழ் செய்தி தொலைக்காட்சி புதிய தலைமுறை யூடியூபில் பகிர்ந்துக் கொண்ட வீடியோவில்,அந்த மனிதர் தொங்கிக் கொண்டிருந்த விளக்கிடம் செல்வதற்கு முன்னர் கைகளை நீட்டி கடைக்கு முன் உடற்பயிற்சி செய்தார்.சில வாகனங்கள் வருவதைப் பார்த்த அவர் மீண்டும் தன் வழக்கமான உடற்பயிற்சியை செய்யத் தொடங்கினார்.
அந்த நபர் ஒரு வழியாக வெற்றிகரமாக பல்பை திருடிக் கொண்டு நடையைக் கட்டினார்., கடையின் சி.சி.டி.வி கேமராவில் இந்தச் சம்பவம் பதிவானது அவருக்கு தெரியவில்லை. சி.சி.டி.வி காட்டிய நேரத்தின் படி இந்தச் சம்பவம் ஜூன் 23 காலை 5 மணியளவில் நடந்திருக்கிறது.
இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் பெரிய அளவில் பகிரப்பட்டதுடன் பல கமென்ட்ஸ்களையும் பெற்று வருகிறது.