This Article is From May 08, 2019

கோவையில் வெப்பத்தாக்கத்தால் 15 வயது சிறுவன் மரணம்

பொள்ளாச்சியிலிருந்து வந்த சிறுவன், செட்டிபாளையத்தில் தனது தாத்தாவின் வீட்டிற்கு வந்திருந்தான், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த பையன் திடீரென கீழே விழுந்து இறந்து விட்டான்

கோவையில் வெப்பத்தாக்கத்தால் 15 வயது சிறுவன் மரணம்

வெயிலினால் 15 வயது சிறுவன் இறந்து விட்டான் (Representational)

Coimbatore:

கோவையில் 15 வயது சிறுவன் ஒருவன் விளையாடும் போது வெயிலினால் ஏற்பட்ட தாக்கத்தால் இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

பொள்ளாச்சியிலிருந்து வந்த சிறுவன், செட்டிபாளையத்தில் தனது தாத்தாவின் வீட்டிற்கு வந்திருந்தான், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த பையன் திடீரென கீழே விழுந்து இறந்து விட்டான். 

அவரது தாத்தாவும் அண்டை வீட்டாரும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இளைஞன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இறப்புகான காரணத்தை அறிந்து கொள்வதற்கு விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

.