Mumbai:
மும்பையில் நண்பர் மீதான கோபத்தில் அவரது 3 வயது குழந்தையை 7வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மும்பையில் உள்ள கோலாபா பகுதியில் நேற்று இரவு 7.30 மணி அளவில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 3 வயது பெண் குழந்தையை அவரது தந்தையின் நண்பரே 7வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கீழே விழுந்த சிறுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்த பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தூக்கி எறிந்தவரை கைது செய்து அதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
மேலும், இது குறித்து போலீசார் கூறும்போது, அந்த நபர் எதற்காக இது போன்ற கொடூரமான செய்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
(With inputs from ANI)
Advertisement
COMMENTS
Advertisement