This Article is From Sep 09, 2018

இரயில் மீது ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி பலி; கோவையில் பரபரப்பு

கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்

இரயில் மீது ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி பலி; கோவையில் பரபரப்பு
Coimbatore:

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரி (வயது 18) என்ற இளைஞர், கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் விடுதியில் இருந்த ஸ்ரீஹரி தனது நண்பர்கள் 5 பேருடன் டீ குடிப்பதற்காக வெளியே வந்துள்ளார். பீளமேடு இரயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்த இவர்கள் அங்கு பெட்ரோல், டீசல் ஏற்றி வரும் இரயிலை கண்டுள்ளனர்.

அப்போது உயர் மின் அழுத்த கம்பியை தொட்டுப் பார்க்க ஶ்ரீஹரி ஆசைப்பட்டுள்ளார்.

அதற்கு அங்கிருந்த அவரது நண்பர்கள் வேண்டாம் என்று தடுத்துள்ளனர். ஆனால், நண்பர்களின் அறிவுரையைக் கேட்காது இரயில் மீது ஏறி மின்சார கம்பியை ஶ்ரீஹரி பிடித்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

பின்னர் இது குறித்து அறிந்த கோவை இரயில்வே போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு உடல் கருகி இறந்து கிடந்த ஸ்ரீஹரியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் பீளமேடு இரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

.